←குடும்பப் பழமொழிகள்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிமனிதன்

வாழ்க்கை→

 

 

 

 

 


439213குடும்பப் பழமொழிகள் — மனிதன்தியாகி ப. ராமசாமி

 

 

 

மனிதன்


பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான்.  -சீனா  உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி.  -ஆர்மீனியா  
உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி.  -( ,, )  
ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும்.  - இதாலி  மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை.
 -லத்தீன்  
நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.  -( ,, )  
மனிதன் நடமாடும் பிணம்.  - ரஷ்யா  ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன்
பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் xராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும்

கழித்திருக்க வேண்டும்.  -( ,, )  
ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே.  -ஸ்பெயின்  
மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை.

 -ஆப்பிரிகா  மனிதன் தானே தனக்குச் சயித்தான்.  -இந்தியா  
மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.  - அரேபியா  
மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்.  -( ,, ) 
மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது.  -கன்ஃபூஷியஸ்  
மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.

 -ஹாலந்து  
வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்றால், அவன் விலங்காவான்.  -சுவின்பர்ன்  
தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.

 -இங்கிலாந்து  
மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம்.  -இங்கிலாந்து  
மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே.  -( ,, )  
சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான்.  -( ,, ) 
வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே.  - மார்க்ட்வெயின்  
மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு.  -ஷேக்ஸ்பியர்  
இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை.  -ஸ்பென்ஸர்  புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம்.
 -ஃபிரான்ஸ்  
மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்.  -ஜெர்மனி  மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கயிறு மனிதன்.  -நீட்ஷே  (மனிதனே தன்னிலும் மேம்பட்ட அதிமானிடனாகப் பரிணமிக்க முடியும் என்ற கொள்கையுடையவர் நீட்ஷே, என்ற தத்துவஞானி.) 
மனிதனுக்கு மனிதன் கடவுள்.  - கிரீஸ்  பெரும்பாலான மனிதர் தீயவர்.  -( ,, )  மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு.  -லத்தீன்  மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட
அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன்.  -( ,, ) 
மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான். -( ,, )  
மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான்.  -செனீகா  
ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது.  -யூதர் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel