←திருமணம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகணவன்

மனைவி→

 

 

 

 

 


439221குடும்பப் பழமொழிகள் — கணவன்தியாகி ப. ராமசாமி

 

 


கணவன்


கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை.  -ஜெர்மனி  
தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு, பெண்ணின் நன்மை கணவன்.  -மலாய்  
மனையாளின் குற்றங்களுக்குமணவாளனே பொறுப்பு; குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி.  -இங்கிலாந்து  
ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே யில்லை.  -( ,, )  
அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிறான், அதிருஷ்டமில்லாதவன் குதிரையை இழக்கிறான்.  - ஜியார்ஜியா  
மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான்.  -லத்தீன்  
கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை.  -ரஷ்யா  
ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது.  - ருமேனியா  
ஏழு வருடங்கள் கழியுமுன்னால் உன்மனைவியைப் புகழாதே.  -ரஷ்யா  
அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது,

அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது.  - செர்பியா  
மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது.  -( ,, )  அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.  - ஸ்பெயின்  உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச்
சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள்.

 -ஸ்பெயின்  
மனிதன் தலை, பெண் தொப்பி.  -சுவீடன்  பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள்
ஓய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப்பான்.  - சுவிட்சர்லந்து  
உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள்.  -யூதர்  மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும்.  -ஆப்பிரிக்கா  
கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள், அவர்களுக்கு எதிராகக் கொடுமையாக இருக்கவேண்டாம்.  -பு. ஏற்பாடு  
நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள்.  - இங்கிலாந்து  
நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான்.  -( ,, )  
செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமா யிருப்பார்கள்.  -( ,, )  கணவர்கள் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும்.  -( ,, ) 
கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம்.  -( ,, ) 
கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது.  -( ,, ) 
புருடன் இறந்ததும், அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு

எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிறார்கள்.  -( ,, )  
கக்கரவர்த்திகளும் தங்கள் மனைவியருக்கு வெறும் கணவர்களாகவே தோன்றுவர்.  -பைரன்  
ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல்.  - ஸ்பெயின்  கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.  -ஸ்பெயின்  
கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது.

 -ரஷ்யா  
அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன்.  -இதாலி  
தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன்.  -லத்தீன் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel